Tuesday, August 25, 2009

சட்டம் ஒரு கழுதை.......?
ஒரு ஜனநாயக நாட்டில் சட்டம் என்பது மக்களுக்காக இருக்க வேண்டுமே அல்லாமல் ஆட்சியில் இருப்பவர்களுக்காக இருக்கக்கூடாது. அப்படி இருக்குமானால், அந்த சட்டத்தை தூக்கி குப்பையில் போடும் உரிமை மக்களுக்கு உண்டு. காமராஜர் அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுது, தென் மாவட்டத்திற்கு ஒருமுறை சென்றிருந்தார். அப்பொழுது, அவரை ஒரு விதவை பெண் சந்தித்தாள். தன் கணவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியில் இருந்ததாகவும், ஒரு சில மாதங்களுக்கு முன்பு, பணியில் இருக்கும் பொழுதே அவர் மரணமடைந்து விட்டதாக கூறினார். அதனால் தனக்கு எவ்வித வருமானமும் இல்லை என்றும், தன் மகனுக்கு ஆசிரியர் பணிக்கான தகுதி இருப்பதாகவும், எனவே அவனுக்கு பணி வழங்க வேண்டும் எனவும் கூறினார். தன்னுடன் இருந்த மாவட்ட ஆட்சியாளரிடம், என்னவென்று காமராஜர் கேட்டார். அவரும் அது உண்மை என்றும், ஆனால் சட்டப்படி அந்த காரணத்துக்காக அவருடைய மகனுக்கு பணி வழங்க முடியாது என்றும் கூறினார். அதிர்ச்சி அடைந்த காமராஜர் மாவட்ட ஆட்சியாளரிடம் " நியாயத் தின் அடிப்படையில்தான் சட்டம் இருக்கவேண்டும். நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி போதித்த ஆசிரியர் குடும்பம் எப்படி வாடலாம்? " எனக்கூறி அங்கேயே வேலைக்கான ஆர்டரை வழங்க சொன்னார்.
ஆனால் இன்று? மின்சார தட்டுப்பாடு என கூறும் அரசு, தமிழ் நாட்டிலுள்ள மு. நரசிம்மன் என்பவரின், "ஒரு பங்கு மின்சாரத்தை மூன்று மடங்காக மாற்றும் கண்டுபிடிப்பு" -க்கு அங்கிகாரம் வழங்க மறுக்கும் கொடுமை! அவருடைய ஆதங்கத்தை நீங்களே பாருங்கள்! வெட்கக்கேடு! வீடீயோவை பாருங்கள்.

1 comment:

  1. அடப்பாவமே!
    இதை பரிசீலனைக்கு கூடவா எடுத்துகல!
    முட்டாபயலுக!

    ஒருவேளை மீலிகை பெட்ரோல் ரேஞ்சுக்கு நினைச்சிடாய்ங்களோ!

    ReplyDelete